×

நிலுவையில் பாலியல் வழக்குகள் நித்யானந்தாவுக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்: இன்டர்போலுக்கு கர்நாடக போலீஸ் கடிதம்

பெங்களூரு: தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் நித்யானந்தா. பெங்களூரு அடுத்த ராம்நகரம் மாவட்டம், பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தினார்.அவர் மீது பாலியல் வன் கொடுமை, சிறுவர்கள் கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடி இருப்பதால், கர்நாடகா மற்றும் குஜராத் மாநில போலீசார், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கும்படி இன்டர்போலுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்நிலையில் நித்யானந்தா மீதான புகாரை விசாரணை நடத்தி வரும் கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கு, அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குள் தொடர்பான முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் இன்டர்போல் சார்பில் கடிதம் எழுதி இருப்பதாகவும், அந்த கடித்ததிற்கு உரிய விளக்கத்தை ஆதாரங்களுடன் சிஐடி போலீசார் அனுப்பியுள்ளதாக சிஐடி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

The post நிலுவையில் பாலியல் வழக்குகள் நித்யானந்தாவுக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்: இன்டர்போலுக்கு கர்நாடக போலீஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nithyananda ,Karnataka ,Interpol ,Bengaluru ,Tamil Nadu ,Bidathi ,Ramnagaram district ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...